

ஒரு விமானப்பயணத்தின் போது அருகில் இருந்த சீக்கியர் அழகாகத் தமிழில் பேசினார். அதோடு தான் பிறந்து வளர்ந்த ஊர் சென்னை என்று பெருமையாகச் சொன்னார். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.
1960-களில் அவர்களின் குடும்பம் வணிகத்திற்காக மதராஸிற்குக் குடியேறியிருக்கிறது. அவர் சென்னையில் பிறந்திருக்கிறார். இங்கேயே கல்லூரி வரை படித்திருக்கிறார். வேலைக்காக டெல்லி சென்றவர் அங்கிருந்து அமெரிக்கா சென்றுவிட்டார். இப்போதும் அவரது சகோதரிகள் சென்னையில் வசிக்கிறார்கள் என்றார்.