​போரெ​திர்த்த காதை

​போரெ​திர்த்த காதை
Updated on
3 min read

கடந்த மாதம் கவிஞர் சுகு​மாரன் முகநூலில், “ஒரு யுத்​தத்தை ஆரம்​பிக்க / இரண்​டு​பேர் போதும் / எதிரி​யாக மாறிய நண்​பனும் / நண்​ப​னாக மாறிய எதிரி​யும் / ஒரு யுத்​தத்​தின் முடி​வில் / ஐந்து பேர் எஞ்​சு​வார்​கள் / இறந்​தவன் ஒரு​வன் / சுமப்​பவர் நால்​வர் / ஒரு யுத்​தம் / புதிய சாதி​களை உரு​வாக்​கு​கிறது / அங்​கவீனர்​கள் / அநாதைகள் / கைம்​பெண்​கள் / தரித்​திரர்​கள் / கூடவே / மூடர்​களை / கல்​நெஞ்​சர்​களை” என்ற கவிதையைப் பகிர்ந்​திருந்​தார். போரின் அசல் முகத்​தைச் சில சொற்​களி​லேயே எட்​டி​விட்ட கவிதை​யிது. அந்த இரண்​டு​பேர் ஆரம்​பித்த யுத்​தம் நினைத்​துப் பார்க்க முடி​யாத பேரழி​வு​களை நிகழ்த்​தி​விட்​டுத்​தான் முடிகிறது; சில முடி​யாமல் ஆண்​டுக் கணக்​காகக் கனன்​று​கொண்​டும் இருக்​கிறது. பெரும்​பாலும் இரு நபர்​களுக்கு இடையி​லான ‘தான்’ எனும் அகங்​காரம்​தான் யுத்​தத்​தைத் தொடங்கி வைக்​கக் காரண​மாகிறது. ஆனால் போரின் முடிவு தொடங்​கிய​வர்​களின் கையை​யும் மீறிச் சென்று விடு​கிறது. உதா​ரணம், பாரதப்​போர். யுத்​தம் நடந்த நிலம் பழைய பாதைக்கு மீண்​டும் திரும்​புதல் என்​பது ஒரு கனவைப் போன்​றது​தான்.

நாட்​டுப்​பற்​று, மொழிப்​பற்​றைப்​போல வீரம் என்​பதும் ஒரு போதையூட்​டப்​பட்ட சொல். ஐயனாரித​னார் பாடிய புறப்​பொருள் வெண்​பா​மாலை​யில் குடிநிலை​யின் சிறப்​பைக் கூறும்​போது, “கல்​தோன்றி மண்​தோன்​றாக் காலத்தே வாளொடு / முன்​தோன்றி மூத்த குடி” என்று எழு​தி​விட்​டுச் சென்​று​விட்​டார். தமிழரின் பெரு​மிதத்​தைக் கூறு​வதற்​காக இந்த அடிகள் ஒரு பழமொழி​போல் தொடர்ந்து பயன்​படுத்​தப்​படு​கின்​றன. ஐயனாரித​னார் கூறியதன் நோக்​க​மும் சூழலும் வேறு; ஆனால், தமிழர்​களின் தொன்​மை​யை​யும் வீரத்​தை​யும் கட்​டி​யெழுப்​பிக் கொள்​வதற்​கான பொருத்​த​மான பாடலாக இது அமைந்​து​விட்​டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in