எம்எஸ்பி அறிவிப்பு ஏன் குழப்ப வேண்டும் விவசாயிகளை?

எம்எஸ்பி அறிவிப்பு ஏன் குழப்ப வேண்டும் விவசாயிகளை?
Updated on
3 min read

விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்ததுபோலவே, 2025-26ஆம் ஆண்டு காரீஃப் பருவத்துக்கான 14 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலைகளை (Minimum Support Prices) மத்திய அரசு மே 28 அன்று அறிவித்திருக்கிறது. தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கிவிட்டதால், இந்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும்.

கடந்த ஆண்டைவிட, இந்தத் தடவை சராசரியாகப் பயிர்களுக்கு 7% விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் உற்றுநோக்கினால், இந்த அறிவிப்பானது பயிர்களின் சாகுபடிச் செலவையோ, அவற்றின் உள்நாட்டுத் தேவையையோ கருத்தில் கொள்ளாமல் விவசாயிகளின் பயிர்த் தெரிவுத் திட்டத்தைக் குழப்புகிறது என்றே சொல்ல வேண்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in