

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஆறு பவானி. இந்த ஆற்றின் மீது இரண்டு வகைக் கொடுந்தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒன்று, கொடிய நச்சுக்கழிவுகளைச் சுத்திகரிக்காமல் ஆற்றில் கலப்பதன் மூலம் ஊரெங்கும் புற்றுநோய்க்கான சூழலை உருவாக்குகின்றன ஆலை நிர்வாகங்கள்.
இரண்டு, நடைபெறாத வேலைகளுக்கு ‘அணைகள் புனரமைப்பு - மேம்படுத்துதல் திட்டம்’ (Dam Rehabilitation and Improvement Project - DRIP) என்று பெயர் சூட்டி, உலக வங்கி மூலம் கடன்களை வழங்கி ஆற்று நீரை வசப்படுத்த முனைகின்றன பெரு நிறுவனங்கள்.