அன்றாடமும் இறை வழிபாடும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 20

அன்றாடமும் இறை வழிபாடும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 20
Updated on
2 min read

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.

பத்​தொன்​பதாம் நூற்றாண்டு மானுட​வியலின் மற்றொரு வியத்தகு கண்டு​பிடிப்பு பல்வேறு ஆதிவாசிச் சமூகங்​களிலும் ஏதோ ஒருவகையில் இறைவழிபாடு இருந்தது என்பது​தான். மானுட சுயம் தன் நினைவுசேகரத்தை அறிவுசேகரமாக மாற்றி, சமூக உறவுகளை நிலைப்​படுத்த வேண்டு​மென்​றால், சுயத்தைத் தன்னிலை​யாகக் கட்டமைக்க வேண்டு​மென்​றால், மற்றமையை ஒரு புள்ளியில் குவித்து அடையாளப்​படுத்​தாமல் அதனைச் செய்வது கடினம் எனலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in