

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சி, குஜராத் தடய அறிவியல் இயக்குநரகத்தின் டி.என்.ஏ. ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விபத்தில், உயிரிழந்தவர்களில் 120 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச்சூழலில், முழுவதும் கருகிய மனித உடல்களை அடையாளம் காண்பது எப்படி என்கிற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. உயிரிழந்தோரைச் சட்டமுறைப்படி அடையாளம் காண அறிவியலாளர்களுக்கும் தடய அறிவியல் நிபுணர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனை வசதிகள் உதவுகின்றன என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.