நுழைவுத் தேர்வுகளின் நோக்கம் வெற்றிபெற்றதா?

நுழைவுத் தேர்வுகளின் நோக்கம் வெற்றிபெற்றதா?
Updated on
3 min read

உலகின் பல பகுதிகளில், பல நூற்றாண்டுகளாக, பெரும் மக்கள் கூட்டத்துக்குக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, இந்தியாவில் இந்த உரிமை மறுப்பு ஒரு சமூக மரபாகவே தொடர்ந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம், ஆசிய - ஆப்ரிக்க நாடுகளின் விடுதலை இயக்கங்கள், சீர்திருத்தங்களுக்கான கிளர்ச்சிகள் என்று பல்வேறு வடிவங்களில் தோன்றிய முற்போக்கு இயக்கங்கள் காரணமாகக் கல்வி கற்கும் உரிமை உள்ளிட்ட சில உரிமைகள் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்தன.

அரசியல் விடுதலை​யடைந்த இந்தியா​வில், குடிமக்​களின் கல்வியறிவு மேம்பட, இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறைப்படி, மத்திய / மாநில அரசாங்​கங்கள் பல கொள்கை முடிவுகளை, திட்டங்களை மேற்கொண்டன. அதன் விளைவாகக் கடந்த காலங்​களில், கல்வித் துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்​திருப்பது குறிப்​பிடத்​தக்கது. எனினும், தேசத்தின் ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும்​படியான சில நிகழ்வுப்​போக்​கு​களும் ஏற்பட்​டிருக்​கின்றன. நுழைவுத் தேர்வுகள், கூடுதலான பொதுத் தேர்வுகள் என்னும் பெயரில் வாய்ப்புகள் மறுக்​கப்​படுவதாக எழுந்​திருக்கும் விமர்​சனங்கள் புறந்​தள்​ளத்​தக்கவை அல்ல.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in