அதிகரிக்கும் மந்தை மனநிலை: அசம்பாவிதங்களைத் தவிர்ப்பது எப்படி?

அதிகரிக்கும் மந்தை மனநிலை: அசம்பாவிதங்களைத் தவிர்ப்பது எப்படி?

Published on

பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உலுக்கிவிட்டது. சில 1,000 பேர் மட்டுமே குழுமியிருக்கும் அளவுக்கு இடம்கொண்ட அந்த மைதானத்தில், திடீரென லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கிறது. சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

சில மாதங்​களுக்கு முன்பு டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளா​வுக்குச் செல்வதற்காக ஏராளமான மக்கள் ஒரே நடைமேடையில் கூடியதில் கிட்டத்தட்ட 18 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்​தார்கள். கடந்த ஜனவரியில் அதே கும்பமேளாவில் 30க்கும் மேற்பட்ட மக்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்​தார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in