

பெயர்ப்பாளர், பேச்சாளர் எனப் பன்முகத்துடன் தொடர்ந்து இயங்கிவருகிறார் இரா.பிரேமா. பெண்ணியம் தொடர்பான பொதுச் சமூகத்தின் புரிதல் குறித்துத் துல்லியமான பார்வை கொண்ட அவருடனான நேர்காணல்...
பேராசிரியர் பிரேமா, ‘பெண்ணியம்’ பிரேமாவாக உருவானது எப்படி? - அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பணிக்குச் சேர்ந்தபோது, அங்குள்ள நூலகத்தில் ஏராளமான பெண்ணியப் புத்தகங்கள் இருந்தன. அவற்றால் ஈர்க்கப்பட்டு, படிக்க ஆரம்பித்தேன். அந்தப் படிப்பு என் சிந்தனையை விரிவுபடுத்தியது. பிறகு, பேராசிரியர் ஆனி தாமஸ், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பெண்ணியக் கோட்பாடுகள் குறித்துச் சொற்பொழிவாற்ற அழைத்தார். 1994இல் ‘பெண்ணியம்’ நூலை எழுதினேன். அதிலிருந்துதான் ‘பெண்ணியம்’ பிரேமாவாக அறியப்படுகிறேன்.