

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 111, 200இல் சட்ட முன்வடிவுகளுக்கான ஒப்புதல் என்கிற தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ள ‘முடிந்தவரை விரைவில்’ (as soon as possible) என்ற சொற்றொடர் சேர்க்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதையும், குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் ‘விருப்ப அதிகாரம்’ (discretion) உள்ளதா என்பதையும் விரிவாகப் பார்ப்பது அவசியம்.
நாடாளுமன்றத்தாலும் சட்டமன்றத்தாலும் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வடிவுகளுக்கு (மசோதாக்களுக்கு), முறையே குடியரசுத் தலைவரும் ஆளுநரும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது அவற்றை மறுபரிசீலனைக்குத் திருத்தங்களோடு திருப்பி அனுப்புவதற்கான காலவரையறை குறித்த விவகாரம், பேசுபொருளாகவும் விவாதப் பொருளாகவும் இருந்துவந்த நிலையில், தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் கால நிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.