சாதிவாரிக் கணக்கெடுப்பு: சமூக நீதிக்கான ஒரே தீர்வு அல்ல! 

சாதிவாரிக் கணக்கெடுப்பு: சமூக நீதிக்கான ஒரே தீர்வு அல்ல! 
Updated on
3 min read

நீண்ட காலமாக, இந்திய அரசின் பொதுநலக் கொள்கை உருவாக்கத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் முதுகெலும்பாகத் திகழ்கின்றன. சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி போன்ற துறைகளில் நுட்பமான திட்டமிடல்களை மேற்கொள்ளும் வகையில் இத்தரவுகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. இந்நிலையில், அடுத்த தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது - சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்துக்கொள்வதாக - நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிற்​படுத்​தப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் துல்லியமான புள்ளி​விவரத் தரவுகளைச் சேகரிப்பது, பலருடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இருப்​பினும் சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தேவைக்கு அதிகமாக வலியுறுத்துவது, ஆளும் கட்சியின் அக்கறை, நோக்கம் ஆகியவை குறித்த கவலையை ஏற்படுத்து​கிறது. துல்லியமான தரவுகள் இல்லாத​தால்தான் விளிம்​புநிலை மக்களுக்கான நலத்திட்​டங்களை உருவாக்கு​வதில் - நியாயப்​படுத்த முடியாத அளவுக்கு - காலதாமதம் ஏற்படு​வ​தாகச் சொல்லப்​படு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in