

சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் பாறைச் சரிவு ஏற்பட்டதில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கல் குவாரிகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளுக்கு மட்டுமல்லாமல், குவாரிகள் தொடர்பான நீண்ட காலப் பிரச்சினைகளுக்கும் தமிழக அரசு தீர்வு காண வேண்டிய தருணம் இது.
குவாரிகளில் மணல் விற்பனையால் கிடைக்கும் வருமானம் மூலம் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமலாக்கத் துறை 2023இல் எட்டு மணல் குவாரிகளிலும் அவற்றுடன் தொடர்புடையோருக்குச் சம்பந்தமான இடங்களிலும் சோதனை நடத்தியது.