நினைவில் உலவும் யானை | நாவல் வாசிகள் 8

நினைவில் உலவும் யானை | நாவல் வாசிகள் 8
Updated on
3 min read

ஒரே பெயர் கொண்ட இருவர் சந்தித்துக் கொள்ளும்போது அவர்களை அறியாமலே கூச்சம் வந்துவிடுகிறது. சில நேரம் பெயரின் காரணமாகவே கூடுதல் நெருக்கமும் ஏற்படுகிறது. ஒரே பெயர் வைத்திருப்பதால் இருவரும் ஒன்றுபோல இருக்க மாட்டார்கள். ஆண் பெயர் கொண்ட பெண்களும், பெண் பெயர் கொண்ட ஆண்களும் தனது பெயருக்காகத் தொடர்ந்து குழப்பங்களைச் சந்திக்கிறார்கள்; தவிக்கிறார்கள். பெயரில் என்ன இருக்கிறது, என்று எளிதாக விட்டுவிட முடியாது.

ஆங்கில எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸ் லண்டனிலுள்ள கல்லறைக்குச் சென்று அங்குள்ள பெயர்களைத் தனது குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்வாராம். அந்தப் பெயர்களைச் சற்று மாற்றியே தனது கதாபாத்திரங்களுக்கு வைப்பது அவரது வழக்கம். ஒரு முறை டெல்லியில் டாக்சியில் அக்பர் சாலை வழியாகச் சென்றேன். மன்னர்கள் மறைந்துவிட்டாலும் அவர்களின் பெயர்கள் மறையவில்லை என்று காரோட்டி வேடிக்கையாகச் சொன்னார். அவர் சொன்னது உண்மை. சில பெயர்கள் காலம் காலமாக மறையாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. சில பெயர்கள் காலத்தின் கைகளுக்குள் மறைந்து விடுகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in