

சமீபத்திய பாகிஸ்தான் - இந்தியா மோதல்களில் நம் தரப்பில் என்ன வகை ஏவுகணைகள் ஏவப்பட்டன, எதிராளியின் என்ன வகை ட்ரோன்கள் முறியடிக்கப்பட்டன, எந்த வகை வான் பாதுகாப்பு மண்டலங்கள் சிதைக்கப்பட்டன என்பது குறித்தெல்லாம் விவரங்கள் வெளியாகின. ஆனால், உங்கள் பின்னால் எதிரி வந்துகொண்டிருக்கும்போது அதை அறிய முடியவில்லை என்றால், உங்கள் வாள் எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் பயனில்லை.
கண்ணுக்குப் புலப்படாத எதிரி இருட்டில் நெருங்கிக்கொண்டிருக்கும்போது, கையில் கேடயம் இருந்தாலும் அதனால் பலனில்லை. என்னதான் சுதர்சன சக்கரம், ஹாமர், ரஃபேல், ஆகாஷ்தீர், ஸ்கால்ப், பார்கவ் போன்றவை தாக்குதலில் நமக்குக் கைகொடுத்தாலும், வேறொரு தொழில்நுட்ப வசதி இல்லை என்றால், இவற்றால் இந்த அளவு பலன் இருந்திருக்காது. அது செயற்கைக்கோள்!