

20ஆம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்கக் கறுப்பின மக்களின் மகத்தான தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் மால்கம் எக்ஸ் (Malcolm X). அன்றைய அமெரிக்காவில் சிறிதும் பெரிதுமாக இருந்த பல கறுப்பின மக்களின் போராட்டக் குழுக்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், அவர்களோடு இணைந்து கொள்கைரீதியாக வேலை செய்ய விரும்பியவர்.
அவரின் போராட்ட வழிமுறைகளும் சுயசமூகத்தின் மீதான மதிப்பீடும் அமெரிக்கக் கறுப்பின மக்களைத் தாண்டி, உலகம் முழுவதும் சுரண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் உள்ளாகிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இன்றளவும் வழிகாட்டலாக உள்ளன.