65% உற்பத்தியில் ஈடுபடுபவர்களை அரசுதானே காக்க வேண்டும்? - தொழிலாளர் நல செயல்பாட்டாளர் இரா.கீதா பேட்டி

65% உற்பத்தியில் ஈடுபடுபவர்களை அரசுதானே காக்க வேண்டும்? - தொழிலாளர் நல செயல்பாட்டாளர் இரா.கீதா பேட்டி
Updated on
3 min read

இந்தியாவில் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களைவிட அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அமைப்பு சாராத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் ஏராளம். இந்தச் சூழலில் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கான சட்டங்கள், பிரச்சினைகள், சிக்கல்கள் குறித்து அமைப்பு சாராத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகரும் அவர்களுக்காக நீண்ட காலமாகப் போராடிவருபவருமான இரா.கீதா அளித்த பேட்டி:

உள்நாட்டு உற்பத்தியில் 65% பங்களிப்பு வழங்கக்கூடிய அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன? - சொல்​லிக்​கொள்ளும் விதத்தில் இல்லை என்பதுதான் உண்மை. அமைப்பு சாராத் தொழிலா​ளர்கள் எந்த அமைப்​பிலும் இல்லாமல் இருப்​பதுதான் இதற்குக் காரணம். அவர்களுக்குப் போதுமான விழிப்பு​ணர்வும் இல்லை. தமிழ்​நாட்டில் அமைப்பு சாராத் தொழிலாளர் கூட்டமைப்பு இருக்​கிறது. இந்திய அளவிலும் தற்போது உருவாக்கி வருகிறோம். இன்னமும் பல தொழிலா​ளர்கள் தனித்​தனியாக இயங்கி வருகிறார்கள். மொத்த​மாகச் செயல்​படு​வதற்குத் தேசிய அளவில் ஒருங்​கிணைப்பு தேவை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in