சாட்பாட்டிடம் நன்றி சொல்வதால் சூழலியல் பிரச்சினை வருமா?

சாட்பாட்டிடம் நன்றி சொல்வதால் சூழலியல் பிரச்சினை வருமா?

Published on

‘தயவு செய்து’ என்று சொல்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆங்கிலப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஏ.ஜி.கார்டினர் அழகான கட்டுரை (On Saying Please) ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தச் சொல்லோடு ‘நன்றி’ என்னும் சொல்லின் அருமையையும் தேவையையும் நாம் அறிந்தே இருக்கிறோம். இருப்பினும், ஏஐ யுகத்தில் இந்த இரண்டு சொற்களும் தேவையில்லாத இடையூறுகள் என்னும் எண்ணத்தை சாட்ஜிபிடி ஏற்படுத்தியிருக்கிறது.

தன்னிடம் பணிவுடன் கேள்வி கேட்கப்​படு​வதை​யும், பதிலுக்கு நன்றி சொல்லப்​படு​வதையும் சாட்ஜிபிடி எதிர்​பார்க்​கிறதா என்று தெரிய​வில்லை. ஆனால், அதன் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-யின் நிறுவனர் சாம் ஆல்ட்மன் அண்மையில் சாட்ஜிபிடி​யிடம் பயனாளிகள் ‘தயவுசெய்து’, ‘நன்றி’ ஆகிய சொற்களைச் சொல்லிக்​கொண்​டிருப்​பதால் ஏற்படும் இழப்பு பற்றிக் கவலை தெரிவித்​திருப்​பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in