

சென்ற வாரம் கூத்துப்பட்டறையில் பிரளயன் இயக்கத்தில் நிகழ்த்தப் பட்ட ‘பட்டாங்கில் உள்ளபடி’ நாடகம் மனதை உலுக்கியது. அதையும் தாண்டி இதற்கெல்லாம் என்னதான் வழி என்கிற மூச்சுத் திணறலை உண்டாக்குகிற ஒரு படைப்பாக உணர வைக்கிறது.
இந்த நாடகத்தில் வரக்கூடிய டிஎஸ்பி கதாபாத்திரம் போன்று இந்தியா முழுமையும் தேடினாலும் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. ஒரு வேளை நேர்மையான தனிமனிதர்கள் இருக்கலாம். ஆனால், ஒரு சாதிய அதிகார சமூக பரப்பில் அப்படி ஒரு நேர்மையாளர் சாத்தியமா? என்று கேள்வி எழுப்புகிறது இந்நாடகம்.