

கடும் நிதிநெருக்கடிக்கு இடையிலும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்கள் தொய்வின்றிச் செயல்படுத்தப்பட்டுவருவதாகச் சட்டமன்றத்தில் தெரிவித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வரும் கல்வி ஆண்டுக்கான பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி இரண்டிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும் நிலையில், தமிழகத் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை என அமைச்சர் தெரிவித்திருப்பது மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த நம்பிக்கையை விதைத்திருக்கிறது.