

தமிழ்நாட்டில் கோடைக்காலம் எப்போதுமே கடுமையானது. ஆனால், காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட வெப்ப அலைகள் இப்போது மிகவும் தீவிரமடைந்து, உடல்நலப் பாதிப்புகளுக்கும் சமூக நீதிப் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்திருக்கின்றன.
இவை பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களையும், நகரங்களில் வெயிலில் உழைக்கும் தொழிலாளர்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள் என அனைவரையும் கடுமையாகப் பாதிக்கின்றன. பெரும்பாலான மக்கள் கான்கிரீட், அஸ்பெஸ்டாஸ், தகரத்தால் மேற்கூரை கொண்ட வீடுகளில்தான் வாழ்கின்றனர். கான்கிரீட் வீடுகள் பகலில் வெப்பத்தைக் கிரகித்து, இரவிலும் உட்புறத்தை வெப்பமாகவே வைத்திருக்கின்றன.