

கடந்த சில வாரங்களாக உலகப் பொருளாதாரம் பெரும் கொந்தளிப்பைச் சந்தித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி ‘சர்வதேச அவசரப் பொருளாதார அதிகாரச் சட்டம்’ என்கிற சட்டத்தை அமல்படுத்தி, ஒரு சர்வதேச வர்த்தகப் போரைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்.
அதேநேரம் அந்த வார இறுதிக்குள், ஊகப் பத்திரச் சந்தைகளின் நல்லறிவு, டிரம்ப் தொடங்கிய அபத்தமான வர்த்தகப் போரை நிறுத்தியது. வாரத்தின் பிற்பகுதியில், பத்திரச் சந்தைகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, தனது முந்தைய முடிவை டிரம்ப் மாற்றினார். ஏப்ரல் 9 அன்று பெரும்பாலான நாடுகள் மீதான கூடுதல் பரஸ்பர இறக்குமதி வரிகளை நிறுத்தி வைத்தார். ஆனால், சீனாவின் வரி மட்டும் 145% ஆக உயர்த்தப்பட்டது.