

அண்மையில் இணையத்தில் கசியவிடப்பட்ட ஒரு நடிகையின் அந்தரங்கக் காணொளியைச் சிலர் மும்முரமாகச் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். குறிப்பிட்ட அந்த நடிகை அது தொடர்பாக விளக்கம் அளித்த பின்னரும் விவாதங்கள் தொடர்ந்தன. இந்தப் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள் இன்னும் மோசமானவை. ஏதோ விளையாட்டாக, கேளிக்கையாக உரையாடுவதுபோலப் பலர் அந்தக் காணொளியைத் தாங்களும் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தினர்.
அதற்காகப் பின்னூட்டங்களில் புள்ளி வைத்தனர். இது ஓர் எடுத்துக்காட்டுதான். ஆபாசமான பதிவுகளை, பின்னூட்டங்களை வெளியில் திட்டிக் கொண்டே நமது சமூகம் அந்தப் போக்கை வளர்த்து வருகிறது. ஒவ்வொரு மனதுக்குள்ளும் இருக்கும் விகாரம், நகைச்சுவை என்கிற பெயரால் நாகரிகமாக அங்கீகரிக்கப்படுவது சமூகத்துக்குக் கேடு.