குழந்தை எழுத்​தாளர் சங்​கத்​தின் பவள விழா ஆண்டு

குழந்தை எழுத்​தாளர் சங்​கத்​தின் பவள விழா ஆண்டு
Updated on
3 min read

1950 ஆம் ஆண்டு இந்​திய அரசி​யல் வரலாற்​றில் மிக முக்​கிய​மான ஆண்​டு. ஆம், அரசி​யலமைப்​புச் சட்​டம் இயற்​றப்​பட்​டு, உலக அரங்​கில் குடியரசு நாடாக தன்​னைப் பறை​சாற்​றிக் கொண்​டது. அதே ஆண்டு இன்​னொரு வகை​யில் உலக இலக்​கிய வரலாற்​றில் மிக முக்​கிய​மான ஆண்​டாக அமைந்​தது. 1950, ஏப்​ரல் 15 ஆம் நாள் அத்​தகைய சிறப்​பிற்கு காரண​மாக இருந்​தது.

குழந்தை இலக்​கி​யத்​தின் அடை​யாள​மாகத் திகழ்ந்து வரு​கிற அழ.வள்​ளியப்பா சென்​னை​யில், பதிப்​புத்​துறை வித்​தகரும் தனது நண்​பரு​மான பழனியப்​பா​வின் வீட்​டில் ஏப்​ரல் 15 அன்று ஒரு முக்​கிய​மான சந்​திப்​பிற்கு ஏற்​பாடு செய்​திருந்​தார். அந்த வீடு தான் குழந்​தைப் பதிப்பக அலு​வல​க​மாக​வும் அப்​போது செயல்​பட்​டது. எழுத்​தாளர்​கள், கவிஞர்​கள், ஓவியர்​கள், சிறார் இதழ்​களின் ஆசிரியர்​கள், பதிப்​பாளர்​கள் என குழந்தை இலக்​கியச் செழு​மைக்கு வித்​திடு​கிற அனைத்து தரப்​பிற்​கு​மான அழைப்பு அது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in