

2025 ஜனவரி மாதம் செயற்கை நுண்ணறிவுத் துறையின் (ஏ.ஐ.) நெடும்பரப்பில் ‘புராஜெக்ட் ஸ்டார்கேட்’ (PROJECT STARGATE) என்னும் அறிவிப்பு வெளியானது. அமெரிக்காவின் தொழில்நுட்ப வல்லமையை உலகுக்கு அறிவிக்கும் வண்ணம் இருந்தது அந்த அறிவிப்பு.
சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவனம், ஆரக்கிள், சாஃப்ட்பேங், எம்.ஜி.எக்ஸ். ஆகிய தனியார் பெருநிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஒரு கூட்டு முன்னெடுப்புதான் இந்தத் திட்டம். அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏ.ஐ. கட்டமைப்புகளில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் உருவாகியுள்ளது.