21E, சுடலைமாடன் தெரு, நெல்லை | தி.க.சி. நூற்றாண்டு நிறைவு

தி.க.சி.
தி.க.சி.
Updated on
3 min read

தி.க.சி. (திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன்), எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஓர் இலக்கிய இயக்கமாக வாழ்ந்தவர். இளமைப் பருவத்திலேயே தாய், தந்தையரை இழந்து, தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். பள்ளிப்பருவத்திலேயே அவர் பயின்ற திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளி அவரின் நாற்றங்காலாய் அமைந்தது. பாடநூல்களைக் கடந்த தேடலும், நாட்டுப்பற்றும், மகாத்மா காந்தி மீதான ஈடுபாடும் பொது நல நாட்டத்தை விதைத்தன.

‘சுதந்திரச் சங்கு’ இதழில் வந்த சங்கு சுப்பிரமணியன் கவிதை ‘வர்க்க’ வேறுபாட்டை உணர்த்திற்று. ‘சூத்திரப்’ பட்டத்துக்கு எதிரான பெரியாரின் குரல் ‘வர்ண’ வேறுபாட்டை உணர்த்திற்று. அக்காலத்தில் திருநெல்வேலி வட்டாரத்தில் பலரையும் ஈர்த்த சிந்துபூந்துறை சண்முகம் அண்ணாச்சி வழி பொதுவுடைமை இலக்கியங்கள் அவருக்கு அறிமுகமாயின.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in