

வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் சாமானிய, நடுத்தர மக்கள் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை வைப்பு நிதியாக இட்டு வைத்துள்ளார்கள். அது பாதுகாப்பாக உள்ளதா?
தற்போதைய நிலவரம்: 2024 மார்ச் மாதக் கணக்குப்படி, பொதுத் துறை வங்கிகள், உள்நாட்டுத் தனியார் வங்கிகள், வெளிநாட்டுத் தனியார் வங்கிகள் உள்பட மொத்தம் 1,997 வங்கிகள் உள்ளன. இவற்றில், 12 அரசு வங்கிகளில் ஏறத்தாழ ரூ.124 லட்சம் கோடி, 43 கிராம வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி, 85 தனியார் வங்கிகளில் ரூ.76 லட்சம் கோடி, 1,857 கூட்டுறவு வங்கிகளில் ரூ.12 லட்சம் கோடி என ஆக மொத்தம் ரூ.218 லட்சம் கோடி வைப்புத்தொகை உள்ளது.