இசைக்கருவிகளில் தலையாய பறை

இசைக்கருவிகளில் தலையாய பறை

Published on

தமிழ்​நாட்​டுக் கோயில்​களில் சோழர் காலத்​தில் பணியி​லிருந்த கரு​வி​யிசைக் கலைஞர்​கள், ‘உவச்​சர்’ என்ற பொதுச்​சொல்​லால் அழைக்​கப்​பட்​டனர். ராஜகேசரிவர்​மரின் ஐந்​தாம் ஆட்​சி​யாண்​டில் வழங்​கப்​பட்ட திருச்​செங்​கோடு செப்​பேடு பஞ்​ச​மாசப்​தம் கொட்​டும் உவச்​சர்க்கு நிலமளிக்​கப்​பட்​ட​தாகக் கூறுகிறது. இந்​தப் பஞ்​ச​மாசப்​தம் எனும் தொடர் தோல், காற்​று, நரம்​பு, கஞ்​சக்​கருவி​களின் ஒலி​யுடன் குரலொலி​யும் இணைந்த ஐந்​தொலிக்​கூட்​டைக் குறிப்​ப​தாக அகரா​தி​கள் பொருள் தரு​கின்​றன. இத்​தகு ஐந்​தொலிக்​கூட்டு மிகக் சில கோயில்​களி​லேயே வழக்​கி​லிருந்​தது.

சோழர் காலத்​தில் பதி​வாகி​யுள்ள இசைக்​கல்​வெட்​டு​களை ஆராய்​கை​யில் இறைவழி​பாட்​டில் தோல், காற்​று, கஞ்​சக்​கருவி​களே பெரு​வழக்​காக இயக்​கப்​பட்​டமை அறிய​முடிகிறது. தோல்​கருவி​களுள் மத்​தளம் முதல்​நிலை பெறத் திமிலை, கறடிகை ஆகிய இரண்​டும் பல கோயில்​களில் பயன்​பாட்​டில் இருந்​தன. செண்டை கோனேரி​ராசபுரம் உமாமகேசுவரர் கோயி​லில் இசைக்​கப்​பட்​டது. மண்டை எனும் தோல்​கருவி திரு​வான்​மியூர் மருந்​தீசுவரர் கோயி​லில் கொட்​டப்​பட்​டது. இத்​தோல்​கருவி​களுள் அதிக எண்​ணிக்​கை​யில் அமைந்த பெரு​மையை மத்​தளமே பெறுகிறது. சில கோயில்​களில் மூவ​ராக இருந்த மத்​தளக் கலைஞர்​கள் விழாக்​காலங்​களில் எண்​ணிக்​கை​யில் கூடிப் பலராக அமைந்​ததை முதல் ராஜேந்​திரர் கல்​வெட்​டொன்று தெரிவிக்​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in