ஏன் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரிக்கிறது?

ஏன் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரிக்கிறது?

Published on

நீர் இருப்பு பற்றி வெளிவரும் செய்திகள் அச்சமூட்டுகின்றன. ஒருபுறம், எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய நீர் வளங்கள் வேகமாகக் குறைந்துவருகின்றன. மறுபுறம் நீரின் தரம் மோசமடைந்து வருகிறது. உலக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுதல் ஆண்டுதோறும் 1% முதல் 2% வரை அதிகரித்துவருவதால் நிலத்தடி நீர் இருப்பும் குறைந்துவருகிறது. குளங்கள், ஏரிகள் ஆபத்தான வேகத்தில் மறைந்துவருகின்றன. நிலைமை இப்படியே சென்றால் எதிர்காலச் சந்ததியினருக்குத் தண்ணீர் கிடைக்குமா?

பிரச்சினையின் தீவிரம்: உலக வங்கி, யுனிசெஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வெளியிட்​டுள்ள அறிக்கைகள், இன்று உலகளவில் நீர்ப் பற்றாக்குறை மிகவும் பெரிய சவாலாக​வும், கோடிக்​கணக்கான மக்களைத் தினமும் பாதித்து​வரு​வ​தாகவும் கூறுகின்றன. மக்கள்தொகை அதிகரித்து நகரங்கள் தொடர்ந்து விரிவடைவ​தால், தண்ணீருக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in