

‘நவீன இந்தியாவின் கோயில்கள்’ என்று நாட்டின் பெரிய அணைகளை, ஜவாஹர்லால் நேரு குறிப்பிட்டார். இந்தியாவின் தொழில் வளர்ச்சி, உணவு உற்பத்தி தொடர்பான சவால்கள் அணைகள் கட்டுவதன் மூலம் தீர்க்கப்படும் என்று அந்தக் காலக்கட்டத்தில் கருதப்பட்டது.
வேறு எந்தப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் போலவே, அணையின் ஆயுள்காலமும் வரையறுக்கப்படுகிறது. பல்வேறு காரணிகளையும் மாற்றங்களையும் தாண்டி, ஒரு சிறந்த அணைக் கட்டுமானம் சுமார் 1,000 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் எனக் கொள்ளலாம்.