

கட்டிடங்களின் வாழ்நாள் குறித்த கவலை நம் எல்லோருக்கும் உண்டு. கட்டிடங்களின் வாழ்நாளை - அதன் நீர் எதிர்க்கும் திறன் தீர்மானிக்கிறது. நீர் எதிர்க்கும் திறனைத் தரக்கட்டுப்பாடு தீர்மானிக்கிறது.
நீரின் தன்மை, கட்டுமானப் பொருள்களின் இயல்பு பற்றிய புரிதல் இன்றி நீர்க்கசிவைக் கட்டுப்படுத்த இயலாது. இதை நிறுவ மூன்று கதைகள் என்னிடம் உண்டு. 45 ஆண்டு கால இடைவெளியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்தேறிய இந்தக் கதைகளை ஓர் இழை இணைக்கிறது.