

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
மனித உயிர் அன்றாடம் என்ற காலப் பரிமாணத்தில் தான் இயங்குவதை உணர்கிறது. அதன் உயிரியல் தேவைகளுக்கேற்ப இயங்குகிறது. அதன் உடல் இயக்கத்தினூடாக நரம்பு மண்டலத்தின் ஆற்றலால் அது நினைவுகளைச் சேகரிக்கிறது. அது இயக்கத்துக்குத் தேவையான அறிவாக மாறுகிறது.