யார் இந்த அகலிகை? | தொன்மம் தொட்ட கதைகள் - 26

யார் இந்த அகலிகை? | தொன்மம் தொட்ட கதைகள் - 26
Updated on
2 min read

தொன்மக் கதாபாத்​திரங்​களுள் மிக முக்​கியமான இடம் அகலிகைக்கு உண்டு. காலந்​தோறும் அகலிகை​யின் கதை மீள் வாசிப்புச் செய்​யப்​பட்டுக்​கொண்டே இருக்​கிறது. அகலிகை​யின் கதையை வெள்​ளக்​கால் ப.சுப்​பிரமணிய முதலி​யார் ‘அகலிகை வெண்பா’ என்ற பெயரில் மூன்று காண்​டங்​களாகப் பிரித்து விரிவாக எழுதி​யிருக்​கிறார். அகலிகையை மணந்​து​கொள்ள நடைபெற்ற போட்​டி​யில் இந்திரன் திட்​ட​மிட்டுத் தோற்​கடிக்​கப்​படு​கிறான். அகலிகை மீதுள்ள காமமும் முனிவர்​மேல் கொண்ட கோபமும் இந்திரனின் அறிவை மழுங்கச் செய்​கிறது. அகலிகை​யைப் பாலியல் வன்முறை செய்​கிறான். ‘நீ மனதால் கற்பிழக்க​வில்லை’ என்று கௌதமர் அகலிகையை ஏற்றுக்​கொள்​கிறார். ஆனாலும் அவளது மன அமைதிக்​காகச் சில காலம் கல்லாக இருக்​கட்டும்
என்று முடி​வெடுக்​கிறார். இவ்வாறு காலந்​தோறும் அகலிகை​யின் வரலாற்றின்​மீது புனை​வுத் தன்மைகள் கூடிக்​கொண்டே சென்​றிருப்பதை அவதானிக்க இயல்​கிறது.

மரபிலக்​கி​யங்கள் அகலிகை​யைத் தவறு செய்​தவளாகத் தொடர்ந்து சித்திரித்​துக்​கொண்டே வந்திருக்​கின்றன. நவீன இலக்​கி​யங்​கள், அகலிகை தரப்பு நியா​யத்தை வெவ்​வேறு வடிவங்​களில் தொடர்ந்து பேசி வருகின்றன. இவ்வகை​யில், அகலிகை​யின் கதைமீதான மரபிலக்​கி​யத்​தின் இடைவெளிகளை நவீன இலக்​கி​யங்களே நிரப்பி வருகின்றன. இந்திய மொழிகளில் அகலிகை​யின் கதை அதிக அளவில் எழுதப்​பட்​டிருப்​பதாக எழுத்​தாளர் பிரபஞ்சன் கூறுகிறார். புது​மைப்​பித்தனே ‘அகலிகை’, ‘சாப​விமோசனம்’ என்று இரு கதைகளை எழுதி​யுள்​ளார். காவி​யம், சிறுகதை, நாவல், நாடகம், கவிதை எனப் படைப்​பின் எல்லா வகைமை​களி​லும் அகலிகை​யின் கதை எழுதப்​பட்​டுள்​ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in