

இந்தியாவின் பதிப்பு ஓவியங்கள் என ஆவணப்படுத்தினால், அந்த வரிசை ஆர்.எம். பழனியப்பன் என்கிற பெயரில்லாமல் பூர்த்தியடையாது. சென்னை தக் ஷிணசித்ராவில் இவரது நாற்பது வருடக் கலைப்படைப்புகளின் தொகுப்புக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது.
வேறு எந்த ஓவியர்களின் படங்களோடு இருந்தாலும், இவரது ஓவியத்தைக் கண்டுபிடிக்க இயலும். அதைக் கண்டுபிடிக்க உதவுவது அவரது கோடுகளின் அமைப்பே. அதற்கு அவர் சூட்டியிருக்கின்ற தலைப்பும், பதிப்போவியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு ஊடகங்களும் இதை உள்வாங்கிக் கொள்ள எனக்குப் பயிற்சியை அளித்திருந்தது.