செயற்கை நுண்ணறிவு: நெருக்கடியா, நல்வாய்ப்பா?

செயற்கை நுண்ணறிவு: நெருக்கடியா, நல்வாய்ப்பா?
Updated on
3 min read

புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் வேலையிழப்பு உண்டாகுமா? மனித உழைப்புக்கு நிகரான ஒன்றைத் தொழில்நுட்பம் மூலம் முழுமையாகச் சாத்தியப்படுத்திட முடியுமா? உழைப்புச் சக்தியின் முக்கியத்துவத்தைத் தொழில்நுட்பம் தகர்த்துவிடுமா? இதுபோன்ற கேள்விகளைச் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் எழுச்சி தற்போது எழுப்பிவருகிறது.

சர்​வ​தேசத் தாக்கம்: செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டு​வரும் அதிவேக வளர்ச்சி, உலக அளவில் பிரம்​மாண்டமான அளவில் சமூகப் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொழில், இதர சேவைத் துறைகளில் இன்று மனிதர்​களால் மட்டுமே மேற்கொள்​ளப்​பட்டு​வரும் பெரும்​பாலான காரியங்​களைக் கச்சித​மாகச் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட இயந்திரங்கள் (Intelligent Machines) இன்னும் சில ஆண்டு​களில் தயாரிக்​கப்​பட்டு​விடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in