சுகாதாரத் திட்டங்கள் நிரந்தரமாக்கப்படுமா?

சுகாதாரத் திட்டங்கள் நிரந்தரமாக்கப்படுமா?
Updated on
2 min read

2013ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் (National Health Mission) பெயரை ‘பிரதம மந்திரி சம்ங்கர சுவஸ்தயா மிஷன்’ என்று மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அனைத்து மாநில மக்கள் இந்தப் பெயரை அழைப்பதில் சிக்கல்கள் இருப்பதாக எதிர்ப்பு அதிகரித்துவருகிறது. எனினும், பெயர் மாற்றத்தையெல்லாம் தாண்டி இதில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகளின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.

குறைவான ஊதியம்: மாநில அளவில் செயல்​படுத்​தப்​படும் ‘மக்​களைத் தேடி மருத்​துவம்’ திட்​டத்​தில் 573 பிசி​யோதெரபிஸ்ட்கள் (இயன்​முறை மருத்​துவர்​கள்) பணிபுரிந்​து​வரு​கின்​றனர். மேலும் மருத்துவ அதிகாரி​கள், செவிலியர்​கள், ஆய்வகத் தொழில்​நுட்பர் (lab technicians) என ஆயிரக்​கணக்​கானவர்கள் ஒப்பந்த அடிப்​படை​யில் பணிபுரிந்து வருகின்​றனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in