பெருங்கனவும் நிதர்சனமும் | சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025

பெருங்கனவும் நிதர்சனமும் | சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025
Updated on
2 min read

சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி மூன்றாவது ஆண்டாக நடைபெற்றுவருகிறது. டெல்லியிலும் கொல்கத்தாவிலும் பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்தாலும், மொழிபெயர்ப்பு உரிமைகள் சார்ந்து வழிகாட்டுவது அந்த நிகழ்வுகளின் ஒரு பகுதி மட்டும்தான். மாறாக, சென்னையில் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வு, மொழிபெயர்ப்பையும் அதற்கான உரிமைகளைப் பெறுவதையும் முதன்மையான இலக்காகக் கொண்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில், தமிழக அரசால் நடத்தப்படும் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி இந்திய அளவில் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க முயற்சி. தமிழ் நூல்களை உலக மொழிகளுக்குக் கொண்டுசெல்வதும் பிற மொழி நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதுமே இதன் நோக்கம். ஒரு மாநில அரசு இந்த முன்னோடி முயற்சியில் ஈடுபட்டிருப்பது உண்மையிலேயே நம் செம்மொழிக்குப் பெருமை சேர்க்கக்கூடியது.

புத்தகக் காட்சியின் முதல் இரண்டு நாள்களில் பதிப்​பாளர்​களும் எழுத்​தாளர்​களும் மட்டுமே பங்கேற்க இயலும். மொழிபெயர்ப்பு உரிமைகள் சார்ந்த பேச்சு​வார்த்​தைகள் அப்போது நடைபெறும். இறுதி நாளில்தான் மக்கள் அனுமதிக்​கப்​படு​கின்​றனர். பொது நூலக இயக்குநரகமும் தமிழ்நாடு பாடநூல் - கல்வி​யியல் பணிகள் கழகமும் சேர்ந்து இந்நிகழ்வை நடத்து​கின்றன. ஆட்சி​யாளர்களது அக்கறை, சமூக முன்னேற்​றத்​துக்கும் இலக்கியத் துறைக்​குமான பிணைப்பைப் புரிந்​து​கொண்​டுள்ள சில அரசு அதிகாரி​களின் அர்ப்​பணிப்பு உணர்வு ஆகியவைதான் இந்த நிகழ்வுக்கு ஆதாரமாக விளங்​கு​கின்றன. எனினும் இவர்களது உழைப்​புக்கான முழுப்பலன் கிடைக்​கிறதா என்பது கேள்விக்​குறி​தான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in