

ஓர் இசைக் கலைஞர் மறையும்போது, அவரைப் பற்றிய உரையாடல்களில் - சில நேரம் மிகை மதிப்பீடுகள் அல்லது பொருத்தமில்லாத ஒப்புமைகள் இடம்பெறுவது உண்டு. சமீபத்தில் மறைந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் குறித்தும் இப்படியான உரையாடல்கள் நிகழ்ந்தன.
ஜெயச்சந்திரனுக்கு அஞ்சலிக் குறிப்பு எழுதிய கவிஞர் வைரமுத்து, ஜெயச்சந்திரன் பாடிய சில பாடல்களைப் பட்டியலிட்டு நெகிழ்ந்ததுடன் அவரை ‘ஏழைகளின் யேசுதாஸ்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். ஃபேஸ்புக் நண்பர் ஒருவர், யேசுதாஸைவிடவும் நல்ல பாடகர் ஜெயச்சந்திரன் என்று எழுதியிருந்தார். ஜெயச்சந்திரன் ஒருபோதும் இப்படியான ஒப்பீடுகளை விரும்பியதில்லை.