செவன் சாமுராய் 70: இன்றும் வெல்லும் வீரர்கள்

செவன் சாமுராய் 70: இன்றும் வெல்லும் வீரர்கள்
Updated on
3 min read

​முதன் முதலாக அசையும் உருவங்​களைத் திரையில் பார்த்துத் துணுக்​குற்று, மனிதர்கள் எவ்வாறு ஆச்சரி​யத்தில் ஆழ்ந்தனரோ அது 100 ஆண்டுகள் கடந்தும் மாறாமல் இன்றும் தொடர்வது ஆச்சரி​யம்​தான். மனிதனின் அனைத்துவித உணர்ச்​சிகளையும் உள்வாங்​கிக்​கொண்டு தேவையானபோது மீண்டும் அதை நிகழ்த்​திக்​காட்டும் சினிமா ஓர் அற்புதக் கலை.

100 ஆண்டு​களைக் கடந்தும் மக்களைப் பிரமிக்​கவைக்கும் சிறந்த 100 திரைப்​படங்களை வரிசைப்​படுத்த பி.பி.சி. ஒரு முயற்சி எடுத்தது. அதன் ஒரு பகுதியாக ஆங்கிலம் அல்லாத 100 உலக மொழித் திரைப்​படங்​களின் பட்டியலைத் தயாரித்தது. உலகம் முழுவ​திலிருந்தும் 41 வெவ்வேறு மொழி பேசும் 43 நாடுகளைச் சேர்ந்த 209 கலை விமர்​சகர்கள் சிறந்த திரைப்​படங்​களைத் தேர்ந்​தெடுத்​தனர். அகிரா குரோசோவா இயக்கிய ‘செவன் சாமுராய்’ கிட்டத்தட்ட 40 விழுக்காடு கலை விமர்​சகர்​களால் கொண்டாடப்​பட்டு, அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அது இன்றளவும் தொடர்​கிறது.

ஆனால் பி.பி.சி. தேர்வுக் குழுவில் இடம்பெற்ற ஆறு ஜப்பானியர்​களில் ஒருவர்கூட ‘செவன் சாமுராய்’ திரைப்​படத்​திற்கு ஆதரவாக வாக்களிக்க​வில்லை என்பது ஒரு நகைமுரண். குரோசோவா ஒரு மேற்கத்திய பாணி இயக்குநராகவே ஜப்பானில் அறியப்​பட்​டார். யசுஜிரோ ஓசு, கென்ஜி மிசோகுச்சி போன்ற இயக்குநர்கள் நுட்பமான, ஜப்பானியப் பாரம்​பரி​யத்தைப் பிரதிபலிக்கும் படைப்பு​களைத் தந்தனர். அவை ஜப்பானியர்​களின் விருப்​பத்​திற்​குரிய படைப்புகளாக இருந்தன. மொழி புரியாமல் ‘செவன் சாமுராய்’ திரைப்​படத்தைப் பார்த்து ரசித்த எளிய மனிதன் தொடங்கி உலகின் முன்னணி இயக்குநர்கள் வரை இன்றும் ஒரு தவம்போலக் கண்டு ரசிக்​கின்​றனர்.

ஏன் அது சிறந்த திரைப்​படம்?

எளிய கதை. ஒரு ஜப்பானிய விவசாயக் கிராமம். கடும் பாடுபட்டு உழைத்துக் கிடைக்கும் தானியங்களே அவர்களின் உயிரைக் காப்பாற்றும் ஒரே சக்தி. அவர்களின் விளைச்​சலைக் கொள்ளை அடிக்க வரும் கொள்ளைக்​காரர்​களிடம் இருந்து தற்காத்​துக்​கொள்ள வழியின்றி இருக்கும் விவசா​யிகள். சாமுராய்கள் ஜப்பானியச் சமூகத்தின் விலக்​கப்பட்ட கண்ணிகள். பெருமைக்​காகவும் வீரத்​திற்​காகவும் பட்டினி கிடக்கும் சாமுராய்​களைக் கண்டு​பிடித்து, அவர்களைப் பயன்படுத்தி, தங்கள் விளைச்சலை விவசா​யிகள் காப்பாற்று​வதுதான் கதை.

படம் வெளியான காலக்​கட்டம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் அதிகப்​படியான இழப்பையும் தோல்வியையும் சந்தித்​திருந்தது. அமெரிக்க எசமானர்​களின் கண்காணிப்பு வேறு. அந்தக் காலக்​கட்​டத்தில் சரிபாதி ஜப்பானியர்கள் விவசா​யத்தையே நம்பியிருந்​தனர்.

சாமுராய் கலாச்​சா​ரத்தில் போர் என்பது ஒரு வகையில் தவிர்க்க முடியாத விதி. சாமுராய் மனநிலையில் போர் என்றும் முடிவுறுவதே இல்லை. போரை விரும்பும் சமூகத்​திடம் அந்த ஆற்றலை அழிவிற்கு அல்லாமல் உற்பத்​திக்குத் திருப்​பி​விடும் கதைதான் ‘செவன் சாமுராய்’.

சாமுராய் அணிதிரட்டல் பாணி

‘செவன் சாமுராய்’ திரைப்படம் ஒரு புதிய வகையினத்தையே உருவாக்கி​யிருக்​கிறது. ஓர் உயரிய நோக்கத்​திற்காக உயிரையே பணயம்​ வைத்துச் சாகசம் நிகழ்த்தும் பாணி. அந்தக் குழுவிற்கான உறுப்​பினர்​களைத் தெரிவுசெய்​வதில் நிகழும் மாயம் இன்றுவரை தொடர்​கிறது. இதை அடியொற்றிய பிந்தைய படங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர், பெண், பூர்வகுடி வீரர் எனப் பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பு அளிக்​கப்​பட்​டதைப் பார்க்​கலாம். ‘தி மெக்னிபிசன்ட் செவன்’ தொடங்கி, ‘ஸ்டார் வார்’, ‘பக்ஸ் லைஃப்’ எனப் பல அவதாரங்களை எடுத்​துள்ளது ‘செவன் சாமுராய்’.

நூற்றுக்​கணக்கான ஹாலிவுட் திரைப்​படங்கள் எண்ணிலடங்காப் பிற மொழித் திரைப்​படங்கள் அனைத்​திலும் ‘செவன் சாமுராய்’ பாதிப்பு இருக்​கிறது. இயக்குநர்​களையும் நடிகர்​களையும் ஒருசேரப் பாதித்த திரைப்படம் ‘செவன் சாமுராய்’. ஜப்பானியப் புதிய அலை திரைப்​படத்தின் தொடக்கப் புள்ளி இந்தத் திரைப்​படம். ஜப்பானியக் கதை சொல்லும் முறையில் சிக்கலான கதைமாந்தர்​களின் வழியே, ஆழமான சமூக முரண்​பாட்டைப் பேசியதன் மூலம் ஒரு புதிய அலை திரைப்​படங்கள் உருவாகக் காரணமானது ‘செவன் சாமுராய்’. இந்தப் படத்தின் வெற்றியும் கிடைத்த அங்கீ​காரமும் ஜப்பானியப் படங்களுக்கு ஒரு புதிய திறப்பை ஏற்படுத்தின. குரோசோவாவின் மேற்கும் கிழக்கும் சந்திக்கும் உத்தி, அவரது அடுத்​தடுத்த படங்களிலும் தொடர்ந்தது. அதுவரையில் ஜப்பானிய சினிமாவை ஆட்டிப்​படைத்த நாடக பாணியிலான ஜிடைகேகி வகைத் திரைப்​படங்களை முடிவிற்குக் கொண்டு​வந்தது ‘செவன் சாமுராய்’.

இயல்பான நடிப்பு, ஒளிப்​ப​திவு, ஒவ்வொரு சட்டகத்​திற்​குள்ளும் முன்னும் பின்னும் ஆக வெவ்வேறு அடுக்​கு​களில் நகரும் நடிகர்கள், கேமரா கோணம் எல்லாம் இணைந்து, காட்சிபூர்​வ​மாகக் கதை சொல்லும் முறையை வளர்த்தது. சாமுராய்கள், விவசா​யிகளின் கடமை, சமூகத்தில் அவர்கள் பொறுப்பு என்ன என்பதை வரையறுத்தது. அதுவரையில் இருந்​துவந்த வர்க்க வேறுபாடு​களையும் தன்னையே தியாகம் செய்து​கொள்ளக் கட்டாயப்​படுத்​தப்​படும் சமூகக் கட்டமைப்​பையும் கேள்வி கேட்டு, நவீனமய​மாக்கலை ஆதரித்தது இப்படம்.

எழுபதாண்டு கொண்டாட்டம், முடிவுறாத திரையிடல்

1954இல் வெளியான செவன் சாமுராய் கடந்த எழுபது ஆண்டு​களாகத் தொடர்ந்து உலகின் பல்வேறு திரைப்பட விழாக்​களில், பயிலரங்​கு​களில், கல்லூரி​களில், பொது இடங்களில் திரையிடப்​பட்டுக் கொண்டே​யிருக்​கிறது. ஃபிலிம் ரோல்கள், கேசட், சி.டி. டி.வி.டி. பென் ட்​ரைவ், இன்டர்நெட் என வடிவங்கள் மாறினாலும் திரையில் அசையும் சாமுராய்​களின் மூர்க்கம் இன்னமும் குறைய​வில்லை. ரசிகர்​களிடமும் சினிமா கற்றுக்​கொள்ளும் மாணவர்​களிடமும் ஒரே நேரத்தில் தாக்கம் செலுத்து​கிறது இப்படம். அழுத்தமான கதாபாத்​திரங்​கள், ய​தார்த்​தமான கதைசொல்​லல், உடன் அழைத்​துச் செல்​லும் ஒளிப்​ப​திவு, சுவாரசி​யத்​தைக் குலைக்காத படத்தொகுப்பு, கச்சிதமான எழுத்து, இயக்கம்​ என அனைத்து வகை​யிலும் அகிரா குரோசோவா​வின் ‘செவன் சா​முராய்’ தலை​முறைகள்​ கடந்​தும் ​கொண்​டாடப்​பட வேண்​டிய மகத்​தானதொரு கலைப்​படைப்​பு.

தொடர்புக்கு: vijai1975@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in