Published : 26 May 2024 06:06 AM
Last Updated : 26 May 2024 06:06 AM

ப்ரீமியம்
மாணவர்களுக்கு கலை இலக்கியத்தை எப்படிக் கற்பிப்பது?

தமிழ்நாடு முழுக்கப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கோடைகாலச் சிறப்புப் பயிற்சி முகாம்கள் பல்வேறு துறை சார்ந்து நிகழ்ந்துவருகின்றன. கலை இலக்கியம் சார்ந்து, தமிழ்நாடு அரசு தீவிரமாக முன்னெடுத்துவரும் இலக்கியத் திருவிழாக்கள், மாபெரும் தமிழ்க் கனவு, மாவட்டம் தோறும் புத்தகக் காட்சிகள் போன்றவை மாணவர்கள் மத்தியில் இலக்கியம், பண்பாடு குறித்த ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகப் பொது நூலகத் துறையின் சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவின் சார்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு தொடர் பயிலரங்கை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மே 6 முதல் 20 வரை மேடைப் பேச்சு, உரைநடை - புனைவிலக்கியம், கவிதை, ஊடகவியல், திரைக்கதை எழுதுதல் ஆகிய ஐந்து முக்கியமான தலைப்புகளில் ஒவ்வொரு துறைசார்ந்தும் தலா மூன்று நாள் வீதம் பதினைந்து நாள்களுக்கு இந்தப் பயிலரங்குகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்திலும் நடைபெற்றன. அந்தந்தத் துறை சார்ந்த ஆளுமைகள் தங்கள் அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x