Published : 06 May 2024 10:22 AM
Last Updated : 06 May 2024 10:22 AM
அனல் தகிக்கிறது. ஆறுகளில் பொட்டுத்தண்ணீர் இல்லை. புனல் பெருக்கெடுத்த நதிகள் பாயும் திருவையாற்றில் 1776இல் 22 ஓடக்காரர்கள் இருந்துள்ளனர். அதே ஆறுகளில் இப்போது அனல்தான் கானல் நீராகக் கண்களை மறைக்கிறது. மத்திய நீர் ஆணையக் குறிப்பின்படி, தென் இந்திய நீர்த்தேக்கங்களில் 17% மட்டுமே நீர் உள்ளது. எப்போதும் கொதிக்கும் தண்ணீர் தாவாவாக காவிரி மாறிவிட்டது.
வழக்குகளின் வரலாறு: சுதந்திர இந்தியாவில் பல நதி நீர் தாவாக்கள் (பிணக்குகள்) ஏற்பட்டன. நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, அவை தீர்ப்பை விரைந்தும் தந்தன. 1990இல் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றமும் பின்னர் உச்ச நீதிமன்றமும் இறுதித் தீர்ப்பைக் கூற 28 ஆண்டுகள் ஆகின. வரலாற்றின் காலப்பேழையைத் திறந்தால் தொடக்கக் காலங்களில் காவிரி பிறப்பெடுத்த கர்நாடகத்தின் குடகு மலையில் மக்கள் குடியேற்றமோ, பாசனமோ அதிகம் இல்லை. அப்போதெல்லாம் நதியின் பயன்பாடு தமிழகப் பகுதிகளில்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT