Last Updated : 05 May, 2024 07:08 AM

 

Published : 05 May 2024 07:08 AM
Last Updated : 05 May 2024 07:08 AM

ப்ரீமியம்
கலைவெளிப் பயணம் - 4: கலை ஆன்மிகத்தில் சுடரும் ஓவியர்

கருத்துலகின் அடர்த்தியோடும், புதிர்த்தன்மையின் வசீகரத்தோடும், பிரத்தியேகமான அழகியல் நுட்பங்களோடும் அரூபப் பின்புலத்தில் உருவ ஓவியங்களை உருவாக்கும் டக்ளஸ், இன்று உலக அளவில் அறியப்பட்ட பெருமிதத்திற்குரிய நம் ஓவியர். நவீன மனிதனின் அடிப்படைப் பிரச்சினைகளில் உழன்று, அதனூடாகப் பெற்ற பெறுமதியான எண்ண ஓட்டங்களைத் தன் ஊடகத்தின் வழி கலை ஆற்றலோடு வெளிப்படுத்தும் படைப்புச் சக்தி கொண்டவர். இவருடைய ஆத்மார்த்தமான கலை நம்பிக்கையும், கலைவழி ஆன்மிகத் தேடலும் பிறப்பிக்கும் படைப்புகள் நம் மீட்சிக்கான உருவகங்கள்.

ஓவியக் கலை சார்ந்த வாழ்க்கையை மட்டுமே தன்னுடைய ஒரே தேர்வாகக் கொண்டு 1970ஆம் ஆண்டு, தன்னுடைய 19ஆவது வயதில், சென்னை ஓவியக் கல்லூரியில் டக்ளஸ் மாணவராகச் சேர்ந்தார். அக்காலத்தில் கலைக் கல்லூரியின் பயிற்சிச் சூழல், பரவசமளிக்கக்கூடியதாக இருந்தது. மிகச் சிறந்த கலை ஆளுமைகள் தங்கள் கலை வாழ்வின் மிகச் சிறந்த படைப்புகளை ஓர் எழுச்சியோடு உருவாக்கிக்கொண்டிருந்த காலம் அது. மிகுந்த ஆர்வத்தோடு கலை வாழ்வைத் தொடங்கிய டக்ளஸுக்கு இச்சூழலும் பின்னணியும் பெரும் பேறாக அமைந்தன. கல்லூரி வளாகம், சோழமண்டலம் ஆகிய இரண்டு இடங்களிலும் இருந்த படைப்பாளிகளிடமிருந்து இவர் அறிந்துகொண்டும் உருவாகிக்கொண்டும் இருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x