Published : 29 Apr 2024 06:13 AM
Last Updated : 29 Apr 2024 06:13 AM
இறுக்கமாகவும் அதீத அழுத்தமாகவும் சமூகத்தில் விரவிக் கிடக்கிறது சாதியம். சாதிச் சங்கங்களும் சாதியரீதியிலான சிலஅரசியல் கட்சிகளும் மக்கள் சமூகத்திடையே சாதியஉணர்வுக்குத் தீனியிட்டுப் பெருந்தீயாய் வளர்த்துக் கொண்டிருக்கின்றன. விளைவு, சாதியம் பற்றுடன் மட்டும் நின்றுவிடாமல் வெறியாகவும் வேரூன்றி வெகு ஆழமாகப் புரையோடிப் போய்க் கிடக்கிறது.
நகர்ப்புறங்களில் வெளிப்படையாக என்ன சாதி என்று கேட்கப்படாவிட்டாலும் சாதிய உணர்வு என்பது இங்கும் பலரது மனங்களிலும் உள்ளூரப் பொங்கிப் பிரவகித்துக்கொண்டுதான் இருக்கிறது. சாதியமும் ஆணவமும் கலந்து ஏற்படுத்தப்பட்ட வன்மக் கொலைகள், இதுவரை கிராமங்கள், சிறு நகரங்களை மட்டுமே ஆக்கிரமித்திருந்த நிலை மாறி, சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகரத்தையும் இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்திருப்பது ஆபத்தின் அறிகுறி. மதம், சாதி கடந்து சமூகத்தையும் மக்களையும் நேசிப்பவர்கள், சமூக ஆர்வலர்கள் இடையே இது பெருத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT