Published : 28 Apr 2024 06:25 AM
Last Updated : 28 Apr 2024 06:25 AM

ப்ரீமியம்
தொன்மம் தொட்ட கதைகள் - 6: அவளின் சிரிப்பு

எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் சிறந்த கதைகளுள் ஒன்று ‘திரிபுரம்’ (1949). பசியின் தீவிரத்தைப் பேசும் சிறுகதை இது. பஞ்சத்தின் காரணமாகச் செத்துப்போன தன் கணவனைப் புதைத்துவிட்டுத் தன் மகள் வெங்கட்டம்மாவை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறாள் நரசம்மா. சென்னையில் கிடைக்கும் கழிப்பறைகளைத் தூய்மை செய்யும் பணிகளைச் செய்ய மனமில்லாமல், விருதுநகருக்கு வருகின்றனர். கணவன் பசியில் இறந்து போனதை வெளியே சொல்லக் கூச்சப்பட்டுக் காலராவில் இறந்துபோனதாகச் சொல்கிறார் நரசம்மா.

பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். புழு அரித்த ஒரு சொத்தை வெள்ளரிக்காயில் ஒட்டியிருந்த புழுதியை மகளுக்குத் தெரியாமல் ஊதி ஊதித் தின்கிறார். பழைய மான அவமானங்கள் நரசம்மா முன் நொறுங்கி விழுகின்றன. தனக்கென்று சொந்தமாக ஒரு புதிய மரபை ஏற்படுத்திக்கொள்ள முனைகிறாள். அந்தப் புதிய மரபு தன் மகளையே இரவில் இரண்டு ஆண்களிடம் ஒப்படைத்து, பத்து ரூபாயும் ஒரு பழைய புடவையும் சம்பாதிக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x