Published : 07 Apr 2024 08:18 AM
Last Updated : 07 Apr 2024 08:18 AM

ப்ரீமியம்
நாடகம்: ஸ்திரீ பர்வம் | போருக்கு எதிரான பெண் குரல்கள்!

மகாபாரதத்தில் உள்ள 18 பர்வங்களில் ‘ஸ்திரீ பர்வம்’, போரின் இன்னொரு பக்கத்தை விவரிக்கிறது. குருக் ஷேத்திரப் போரில் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்த பெண்களின் துயரம் ‘ஸ்திரீ பர்வ’த்தில் பதிவாகியுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டுஎழுதப்பட்ட நாடகமான ‘ஸ்திரீ பர்வம்’, குடியாட்சி நிலைத்துவிட்ட இக்காலத்திலும் நடைபெறும் போர்களையும் அழிவுகளையும் பெண்களின் தரப்பில் நின்று கேள்விக்கு உள்படுத்துகிறது.

நவீன நாடகத் துறையில் நன்கு அறியப்பட்ட நெறியாளுநர் அ.மங்கை. அவரது கதையாக்கம், இயக்கத்தில் இந்நாடகம் நடத்தப்பட்டது. 2006இலிருந்து மங்கை ‘மரப்பாச்சி’ என்கிற தன்னார்வக் குழுவை நடத்திவருகிறார். சமூகத்தில் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் போன்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாடகங்கள் மூலம் இக்குழு வெளிப்படுத்தி வருகிறது. வேளாண் அறிவியல் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவியும் கல்வியாளருமான மீனா சுவாமிநாதன், 2022இல் காலமானார். அவரது நினைவாகச் சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை அலுவலக அரங்கில் ‘ஸ்திரீ பர்வம்’ நடத்தப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x