Last Updated : 31 Mar, 2024 08:21 AM

 

Published : 31 Mar 2024 08:21 AM
Last Updated : 31 Mar 2024 08:21 AM

ப்ரீமியம்
தமிழ்ஒளி அறுபதாம் நினைவு ஆண்டு: பாரதிதாசனின் சீடர்

கவிஞர் தமிழ்ஒளி பாரதிதாசனின் சீடர். படிக்கின்ற காலத்திலேயே பாவேந்தர் மகன் மன்னர்மன்னனோடு இணைந்து 'முரசு' என்னும் பெயரில் சிற்றிதழ் ஒன்றை நடத்தினர். அந்தச் சிற்றிதழில் பிரஞ்சு அரசிற்கு எதிராக இவர் எழுதிய கட்டுரைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். அதன் பின் புதுச்சேரியில் இருக்க இயலாத சூழல் ஒரு புறம், தமிழ் மீது கொண்ட காதல் ஒரு புறம். அதற்காக பாரதிதாசனின் பரிந்துரைக் கடிதம் பெற்றுக்கொண்டு கரந்தை தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டம் படிக்கத் தஞ்சை சென்றார்.

தஞ்சையில், சாதியக் கொடுமைகளுக்கும் குறைவேதுமில்லாத காலம் அது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், சாதிய ஒடுக்குதலுக்கு ஆளானார். மனம் நொந்த தமிழ்ஒளி பாரதிதாசனிடம் முறையிட்டார். அப்போது சேலம் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தினர் பாவேந்தரை அழைக்க கார் அனுப்பி இருந்தார்கள். அதே காரில் தமிழ்ஒளியை அழைத்துக்கொண்டு பாவேந்தர் கரந்தை கல்லூரிக்கு வந்தார். பாவேந்தருடன் தமிழ்ஒளி வருவதைப் பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ந்துபோய், இனி இப்படி நேராமல் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x