Published : 10 Dec 2023 05:54 AM
Last Updated : 10 Dec 2023 05:54 AM

ப்ரீமியம்
‘மீ காய் கெரு'வும் நானும்…

தமிழின் முக்கியமான எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராமனின் ‘மீ காய் கெரு’ நாவல், அவர் ஏற்கெனவே எழுதிய எது போலும் இல்லாத ஒரு வித்தியாசமான படைப்பு. 1970களின் பிற்பகுதியில் எழுதப்பட்டு, அவரது நூற்றாண்டுக்குப் பிறகு வெளிவரும் அவருடைய முற்றுப்பெறாத நாவல் இது. செளராஷ்டிர மொழியில் இதை முழுமையாய் எழுதிய அவரால், தமிழில் நாலு அத்தியாயங்கள் மட்டுமே எழுத முடிந்தது. அது ஏன் என்ன என்கிற விவரமான பூர்வாஸ்ரமத்தை நாம் இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

அபூர்வமான பாத்திரங்கள்: புதிதாகத் திருமணமான ரகு – மீரா தம்பதி, அவர்கள் இருவருடைய பெற்றோர்களின் தன்முனைப்பால் ஏற்பட்ட சண்டைகளால் பிரிய நேர்கிறது. பின் வழக்கு விவகாரங்களாக மாறி, பிரிவின் நீளம் நான்கு ஆண்டுகளாகிறது. அவருடைய வேறு சில படைப்புகளில் கையாண்டதுபோலவே இந்த நாவலின் சில இடங்களிலும் அவர் செளராஷ்டிர மொழியைத் தமிழ் எழுத்துக்களில் எழுதி, பின் அதை அடைப்புக் குறிக்குள் தமிழில் மொழிபெயர்த்து எழுதிச் செல்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x