Published : 12 Nov 2023 06:18 AM
Last Updated : 12 Nov 2023 06:18 AM

ப்ரீமியம்
வானவில் அரங்கம் | “அடிப்படை மனித விழுமியங்களுக்காகக் குரல் எழுப்புவதும் அரசியல்தான்!” - எழுத்தாளர் திலீப் குமார் நேர்காணல்

குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட திலீப் குமார் (பி.1951), தமிழ் இலக்கியத்தில் தனக்கான தனித்த இடத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறுகதையாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கிவரும் திலீப் குமார், 1970களில் எழுதத் தொடங்கினார். ‘த்வனி புக்ஸ்’ என்கிற பெயரில் சென்னை மயிலாப்பூரில் நீண்ட காலம் புத்தகக் கடை ஒன்றை நடத்திவந்த திலீப் குமார், ஏறக்குறைய கடந்த அரை நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கிய வரலாற்றின் நேரடிச் சாட்சியங்களில் ஒருவர்.

‘மூங்கில் குருத்து’ (1985), ‘கடவு’ (2000) சிறுகதைத் தொகுப்புகள், ‘மௌனியுடன் கொஞ்ச தூரம்’ (1992) இலக்கியத் திறனாய்வு, ‘ரமாவும் உமாவும்’ (2011) நாடகம், ‘The Tamil Story: Through the Times, Through the Tides’ (தொகுப்பாசிரியர்/ பதிப்பாசிரியர், 2016; சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றது) என திலீப் குமாரின் பங்களிப்புகள் ஆழம் கூடியவை. நகர வாழ்வின் இடர்களையும், எளிய நடுத்தர வர்க்க மக்களின் சமூக, பொருளாதாரச் சூழல், அவர்கள் சந்திக்கும் புறக்கணிப்பு, அவை ஏற்படுத்தும் உள, உறவுநிலை மாற்றங்களையும் விவேகத்துடனும், அங்கதத்துடனும் நுட்பமாகக் காட்சிப்படுத்திய திலீப் குமாரின் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன; சில திரைவடிவம் பெற்றுள்ளன. பல்லாண்டு சென்னை வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் கோவைக்குத் திரும்பியிருக்கும் திலீப் குமாருடனான உரையாடலில் இருந்து...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x