Last Updated : 12 Nov, 2023 07:15 AM

 

Published : 12 Nov 2023 07:15 AM
Last Updated : 12 Nov 2023 07:15 AM

ப்ரீமியம்
எழுத்தாளர் ஆனேன்! - நான் ‘கெட்ட' கதை

பிறந்ததிலிருந்தே நான் மற்ற குழந்தைகளைப் போல் அழுததில்லை என்றும், இரண்டு மூன்று வயதில், ஓரிடத்தில் அமரவைத்தால் அந்த இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பேன் என்றும் சொல்வார் அம்மா. விவரம் தெரிந்த பிறகும் அப்படியே. பேச ஆரம்பித்தது ஐந்து வயதில். உடம்பும் நோஞ்சானாக இருந்ததால், சக சிறார்களோடு சேர்ந்து விளையாடுவதில்லை. அதனாலேயே சைக்கிளும் பழக முடியாமல் போயிற்று. சிறுவர்களின் பெரிய பிரச்சினை காலம். இப்போது இருப்பதைப் போல் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நேரத்தைச் செலவிடுவதற்கான சாதனங்கள் கிடையாது.

தொலைக்காட்சி கிடையாது. கைபேசி கிடையாது. சிறுவர்களின் ஒரே பொழுதுபோக்கு, சக சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவதுதான். அது எனக்குக் கிடைக்காமல் போனதால், அப்போது ஊரில் அறிமுகமாகிக் கொண்டிருந்த நூலகங்களில் தஞ்சமடைந்தேன். மிகச் சிறிய அந்த ஊரில் நாலைந்து படிப்பகங்களும் அரசு நூலகமும் இருந்தன. பதின்மூன்று வயதுவரை பிறரின் கதைகளைப் படித்துக்கொண்டிருந்த நான், அதற்குப் பிறகு எழுத ஆரம்பித்தேன். எனக்குத் தெரிந்த எல்லாப்பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x