Published : 31 Oct 2023 06:10 AM
Last Updated : 31 Oct 2023 06:10 AM

ப்ரீமியம்
மதிய உணவுக்கும் அதிகரிக்கட்டும் மானியம்

ஒரு தலைமை ஆசிரியராக எனது பணி அனுபவத்தில், காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வந்து, இறை வணக்கக் கூட்டத்தில் மயங்கி விழுந்த பல குழந்தைகளைப் பார்த்துள்ளேன். பல அரசுப் பள்ளிகளில் இது அன்றாட நிகழ்வாகவே இருந்தது. உடனடித் தீர்வாகத் தாங்கள் கொண்டுவந்துள்ள மதிய உணவைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை உண்ட ஆசிரியர்கள் ஏராளம். இத்தகைய சூழலில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் காலை உணவுத் திட்டம் மிகப் பெரிய புரட்சி என்றே சொல்ல வேண்டும்.

காலை உணவு வழங்குவதற்காக அரசு ஒரு மாணவருக்கு ரூ.12.72 வழங்குகிறது. அதில் அரிசி, பருப்பு, எண்ணெய், சேமியா, ரவை போன்றவை கூட்டுறவு அங்காடிகள் மூலம் சிறந்த நிறுவனங்களின் பொருள்களாக வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்குத் தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கிய காலை உணவு வழங்கப்படுகிறது. மாணவர்கள் காலை உணவுக்காகச் சற்று முன்கூட்டியே பள்ளிக்கு வருகை தருகின்றனர். மாணவர் வருகை சதவீதம் உயர்ந்திருக்கிறது. காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட பின், பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x