Last Updated : 19 Oct, 2023 06:10 AM

 

Published : 19 Oct 2023 06:10 AM
Last Updated : 19 Oct 2023 06:10 AM

ப்ரீமியம்
நீதிபதிக்கே பாதுகாப்பில்லாத இலங்கையில் நீதி நிலைக்குமா?

நீதி என்பது மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டும். அறமும் ஒழுக்கமும் கொண்ட நீதிச் சூழல்தான் ஒரு நாட்டின் அடிப்படைக் கட்டுமானம். அரசு இயற்றும் சட்டங்களைச் செயல்படுத்தும் நீதித் துறை, மக்களின் மனங்களில் அமைதியையும் அறத்தையும் தரவல்லது. ஒரு நாட்டின் குடிமக்கள் அந்த நாட்டின் சட்டங்களையும் நீதியையும் நம்பியே வாழ்கிறார்கள். ஆனால், இலங்கையில் நிலைமையே வேறு. இங்கு நீதித் துறை நீதியாகச் செயல்பட்டிருந்தால் தமிழர்கள்மீது இனப்படுகொலைகள் நடந்திருக்காது; ஈழத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்திப் போராடுகிற நிலையும் ஏற்பட்டிருக்காது.

உயிர் பிழைக்கத் தப்பியோடிய நீதிபதி: இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியான வடகிழக்கில் உள்ள முல்லைத்தீவு, இறுதிப் போர் நடந்த பகுதி. அம்மாவட்டத்துக்கு நீதிபதியாக இருந்தவர் ரி.சரவணராஜா. இவர், அரசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அரசியல் அழுத்தம் காரணமாகத் தீர்ப்புக்களை மாற்றச் சொல்வதாக வும் கூறிப் பதவி விலகியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x